×

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் தகராறு மண்ணெண்ணெய் ஊற்றி இளம்பெண் தீக்குளிப்பு

பெரம்பூர்: புளியந்தோப்பு கே.பி. பார்க் ஜி ப்ளாக் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (32). இவரது மனைவி தாக்சயாணி (27). ஸ்டீபன் ராஜ் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர்களுக்கு கவன்ராஜ் (10) மற்றும் சரண் (9) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் ஸ்டீபன் ராஜ் மற்றும் தாக்சயாணிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் அடிக்கடி சண்டை போட்டனர். இதனையடுத்து நேற்று காலை குழந்தைகளை பள்ளிக்கு விரைவாக அனுப்புவதில் வாய்த் தகறாறு ஏற்பட்ட நிலையில், ஸ்டீபன் ராஜ் பிள்ளைகளை பள்ளியில் விடுவதற்காகச் சென்றுவிட்டார். அப்போது வீட்டிலிருந்த தாக்சயாணி மண்ணெண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். பின்னர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 60 சதவீத தீக்காயங்களுடன் தாக்சயாணி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

The post குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் தகராறு மண்ணெண்ணெய் ஊற்றி இளம்பெண் தீக்குளிப்பு appeared first on Dinakaran.

Tags : Perambur ,Tamarindo KP ,Stephen Raj ,Park G Block ,Dakshayani ,
× RELATED பெரம்பூர் ரமணா நகர் பகுதியில் மெட்ரோ...